வெள்ளி, ஜூலை 04, 2008

க‌ழுத்தை நெறிக்கும் விலைவாசி, கால‌ தாம‌த‌மின்றி கொஞ்சம் யோசி!


தற்ப்போது நிலவிக்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் இருக்கும் வக்கற்ற மத்திய மாநில அரசுகளின் தெனாவட்டுப்போக்கும், பொய்யான வதந்தி பரப்பும் கீழ்த்தரமான‌ செயலும், மக்களின் விழிப்புனர்வை விரும்பாமல் அவர்களை திசை திருப்பும், அவர்களின் புத்தியை மழுங்கடிக்கும் வேலையைத்தான் இன்றைய நாளில் அனைத்து ஊடகங்களும் (All TV Channels, Daily, Weekly, Monthly Magazines), செய்து கொண்டிருக்கின்றன. முழுவதும் வர்த்தகத்தையும் சுயநலத்தையும் அடிப்படையாகக் கொண்ட இவர்களைப்போலவே நம் நாட்டின் எல்லா அரசியல் வியாதிகளும் உங்களுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப்போலவும் தங்களை காட்டிக்கொள்ளவே சொந்த ஊடகங்களின் மூலமாக வியாபார அடிப்படையில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றன.

தோழர்களே, ஓவ்வொரு கண்மும் நம்மைச்சுற்றியும் நம் சமுதாயத்தைச் சுற்றியும் பின்னப்படும் சதிவலைகளை கண்டறிந்து களைய வேண்டியது நம் சமுதாய கடமையாகும். தற்போதைய நிலையில் என்ன நடக்கிறது? யாரால் எதனால் நடக்கிறது என்பதறிய வேண்டியதன் அவசியம் உணர்வீர்களாயின் நம் சிந்தனையும் செயலும் ஒன்றுபட்ட புரட்சியினால் நடப்பவை களைந்து நன்மை பயக்க வழிகோலும்.

போலி கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோதப்போக்கும், மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் எனும் பூச்சாண்டி நாடகமும் 'தொலைக்காட்சி மெகா சீரியல்களை' தோற்க்கடித்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது வரும் திருப்புமுனைக்காட்சிகள் போல...4-ம் தேதி கெடு விதித்திருப்பதாகவும், அதோடு கூட்டணி உறவை முறித்துக்கொள்வதாகவும் அறிக்கை விட்டுள்ள இந்த போலிகளின் முடிவற்ற நாடகமும், ஒத்திகையும் இவர்கள் எப்போதும் பிழைப்புவாத நடவடிக்கையில் தான் தொடர்ந்து இருப்பார்கள் என்பதில் எள் அளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நிலைப்பாட்டினை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும் தோழர்களே., விலைவாசி உயர்வும், பணவீக்கமும், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அதன் காரணமான லாரிகள் வேலை நிறுத்தமும், அதனால் தொடர்ந்த அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடும், அதைப்பயன்படுத்தி லாபம் பார்த்த பதுக்கல்காரர்களும், இவற்றை சரிசெய்ய இயலாத இந்த அடிமை வல்லரசின் பிற்ப்போக்கு நிலைப்பாடும், மக்களின் துயரம் யாராலும் துடைக்கப்பட முடியாமல் போவதையும் கண்கூடாகப்பார்த்த பின்னும் இவை அனைத்திற்கும் நிஜமான மூல காரணமான‌ த‌னியார்ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம், உல‌க‌ம‌ய‌ம் கொள்கைக‌ள் தான் என்ப‌தை அறிவீர்க‌ளா? அறிந்து அடியோடு தூக்கி எறிய‌ ஓர‌ணியாய் திர‌ள்வீர்க‌ளா?

லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 1.20 லட்சம் வேன்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், கார்கள் வேலை நிறுத்தத்தினால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழ‌ந்தைகளின் பாதிப்பு, இந்த லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மட்டுமின்றி அதை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பிழைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை என்னவானது என்பதை சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே.

காய்கறிகள், கனிகள், பூ இவைகளின் திடீர் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்துக்கும் மாற்றுவழி செய்திருப்பதாய் கூக்குரலிடும் அடிமைவல்லரசின் கைகூலி அரசாங்கம் உண்மையில் வெறுமனே வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. அதற்கு உதாரணம் சென்னை உட்பட பல நகரங்களில் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்க்கப்பட்டது. மேலும் சில நகரங்களின் உண்மை நிலைப்பாடுகள்....

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 750 கோழிப்பண்ணைகளில் தினமும் 2.50 கோடி முட்டைகள் தேக்கமும், அவற்றிற்க்கான தீவனத்தட்டுப்பாடும் அங்குள்ள தொழிலாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

ஓசூரில் உள்ள பத்தலப்பள்ளி தக்காளி வியாபாரத்துக்கு பிரபலம். இங்கு 100 டன் தக்காளி தேக்கமடைந்துள்ளது, தினமும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய தக்காளி அழுகி வீணாகும் நிலை உள்ளது.

குன்னூரில் லாரிகள் ஓடாததால் 20 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேங்கியுள்ளது, மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டியை நம்பி ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கூலித்தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் தங்களின் வருமானத்தை (அதாவது அந்த அரை வயித்துக் கஞ்சிக்கும் வச்சிட்டானுங்க வேட்டு) இழந்துள்ளனர்.

நெல்லையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பீடி அனுப்புவது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது, பீடி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெரிய நிறுவனங்கள் ஸ்டாக் வைத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் அங்கு மேலும் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

பரமக்குடி லாரிகள் வேலை நிறுத்தத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான மிளகாய், பருத்தி தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாய் இந்த சரக்குகள் கமிஷன் மண்டிகளில் தேங்கியுள்ளன. இந்த நிலையால் அங்குள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள், டிரைவர், க்ளீனர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, ஒரிசாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரயிலில் அரிசி, உரம் வந்துள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் இவை இறக்கப்படவில்லை. ரயில் வந்த 9மணி நேரத்துக்குள் சரக்குகளை இறக்காவிட்டால் மணிக்கு ஒரு பெட்டிக்கு ரூ.100 காத்திருப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படியாக காத்திருக்கும் பெட்டிகளுக்கு தினமும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ரூபாய் செலுத்தப்படுகிறது.

வர்த்தக சிலிண்டரின் விலையே ஒரு நிலையில்லாத தன்மையாய் இருக்கிறது.
March 2008 - ரூ.1102.65
April 2008 - ரூ.1122.52
May 2008 - ரூ.1093.30
June 2008 - ரூ.1172.30
July 2008 - ரூ.1231.௨0

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான். உதாரணத்துக்கு சில உண்மை நிகழ்வுகளையே உங்கள் முன் வைத்தேன்.
இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடியில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உற்ப்பத்தியை வைத்துக்கொண்டு அவர்களையே பட்டினி போடும் நன்றி கெட்ட, விசுவாசமில்லாத, நேர்மையில்லாத சுயநல பாசிச தலைமைக்கு, அவர்களின் உற்பத்தியை பாதுகாக்க கூட வக்கில்லாமல் போனது. மத்திய அரசுக்குச்சொந்தமான Food Corporations of India (FCI) கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் டன் தாணியங்கள் வீணாகியுள்ளன. மீதமுள்ளவற்றை கெடாமல் பாதுகாக்க FCI 242 கோடி செலவிட்டுள்ளது. கெட்டுப்போன தாணியங்களை அகற்ற 2.59 கோடி செலவழித்துள்ளது. இதிலிருந்து இவர்களின் நிர்வாகத்திறனை நன்றாக நாம் அறிந்துகொள்ள முடியும்.


11-வது ஐந்தாண்டுத்திட்டம் குறித்து விவாதிக்கும் அறிவுஜீவிகள் கடந்த 1௦0- ஐந்தாண்டுத்திட்டங்களின் நோக்கமும், அவற்றிற்கு ஒதுக்கீடு செய்த தொகையும், செயல்பாடுகள் குறித்த விளக்கமும் மக்களிடம் ஒளிவு மறைவின்றி நேர்மையாக ஒப்படைக்கவும், விவாதிக்கவும் இங்குள்ள எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கும் தைரியம் கிடையாது. தன்மானமில்லாத தற்குறிகள், சுயநலத்திற்க்காக கொள்கையையும் நம்பிய மக்களை ஏமாத்தும் நயவஞ்சகர்கள். பசியும், பட்டினியும் கோரத்தாண்டவம் ஆடி மக்களை கொன்று குவிக்கும் மிகக்கேவலமான அரசியல் கொள்கைகளை வகுத்து கூறுபோட்டு தாய்நாட்டை அன்னியனுக்காக காவுக்கொடுத்தவர்கள். இவர்களா நம்மை கரை சேர்க்கப்போகிறார்கள். இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். "விடியாமல் முடியாது" என்பது போல நாம் விழிக்காமல் இருக்கும் வரை நமது துயரங்களும் விடியாது. நமது கவலை எப்படியாய் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாத அல்லது கண்டு கொள்வதுபோல் நடிக்கின்றவர்கள் தான் இங்குள்ள எல்லா ஓட்டுபொறுக்கி கட்சிகளும். தரகுவேலை பார்க்கும் வெட்கம் கெட்ட, மானங்கெட்ட மக்குமோகன் சிங், ச்சித்தம்பரம், அத்துவானி, கர்நாநிதி, செல்வி.செயலலிதா, அவர்களின் கவலையெல்லாம்...அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி மாமாக்களை எப்படி சமாளிப்பது, காஷ்மீர் அரசை எப்படி காப்பாற்றுவது, மக்களவை, சட்டசபைத்தேர்தலை எப்படி சந்திப்பது போன்ற பிழைப்புவாத அடிப்படையிலேயே தங்களின் அறிய மூளையை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்
(இதில் எந்த ஓட்டுக்கட்சியும் விதிவிலக்கல்ல).

உலகின் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் மிகவும் நேரடியான‌ காரணகர்த்தாவாய் விளங்கும் அமெரிக்காவும் (புஷ்) அதன் பின்னணியாய்ச் செயல்படும் பல அமைப்புகளும் உலகத்தை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் பிணந்திண்ணி கழுகுகள். அந்த கழுகுக‌ளில் ஓன்றுதான் வாஷிங்டனில் இருந்து செயல்படும் World Value Survey. இந்த அமைப்பு இந்திய மக்களிடம் மகிழ்ச்சி அதிகரித்து வருவதாகக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளான் அந்த ஆய்வின் தலைமை அதிகாரி ரெனால்ட் இங்கெல்ஹர்ட்.

ஆகவே தாமதம் வேண்டாம், விழித்துக்கொள்வோம்.விரட்டி அடிப்போம் தனியார்மயம், தாராளமயம், உலகம‌யம் என்ற வக்கிரகொள்கைகளையும் அதைபற்றிக்கொண்டிருக்கும் மனித பிசாசுகளையும்.