சனி, ஜூன் 21, 2008

கூலிப்படைகளாய் ஆன‌ போலி கம்யூனிஸ்டுகள்

கம்யூனிசம் அல்லாத எல்லா கொள்கைகளுமே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் என்கிற கோட்பாடே இல்லாமல் தமது பாதையில் பயணிக்கும் போது தங்களின் மக்கள் விரோதப்போக்கை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லாமல் சொல்லிவிட்டு மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள். மக்களுக்கு எதிரான அனைவரையும் மக்கள் மன்றத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும் என்கிற போதிலும் யாரை முதலில் நிறுத்த வேண்டுமென்ற பார்த்தால்..., எதிரிகளை எதிர்த்து அழிக்க வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம், ஆனால் துரோகிகளை .....சிறு கணமும் தாமதிக்காமல் அடையாளம் கண்டு மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி சுவடின்றி அழிக்க வேண்டும்.

தோழர்களே...., நீங்கள் நினைப்பது சரிதான். இங்கே நான் துரோகிகள் என்று சொல்வது 100 விழுக்காடு CPM-ஐ தான். CPM என்றைக்கும் புரட்சி செய்யப்போவதில்லை. அது நம்மை விட இந்த போலி கம்யூனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து சாக்கடையில் ஊறிக்கொண்டிருக்கும் எல்லா ஓட்டுபொறுக்கி கும்பலுக்கும் மிக நன்றாக தெரியும். இவர்களின் புரட்சி பற்றி நமக்கு ஏற்கனவே நந்திகிராம், சிங்கூர் மூலமாக நன்கறிந்தோம். இவர்களின் கூட்டாளிகள் விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு கிராமத்தில் மிகவும் கேவலமான செயலை ஊரறிய அரங்கேற்றி இருக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு) தமிழகம் முழுவதும் இயங்கி விவசாயிகளை ஒரு அமைப்பாக்கி வருகிறது. எமது அமைப்புகள் முன்வைக்கும் நேர்மையான துணிவான விமர்சனங்களை சகிக்க முடியாமல், பதில் சொல்லவும் இயலாத, ஒரு வக்கற்ற வாழ்வு வாழும் இந்த போலி கம்யூனிஸ்டுகள்...........ஒரு பொறுக்கி, ரௌடி போல தங்கள் தாதாயிசத்தை ஆயுதம் கொண்டு வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு என்கிற பகுதியில் இயங்கி வரும் வி.வி.மு அமைப்பின் ஆதரவாளரான தோழர்.ராஜேந்திரன்-ஐ திட்டமிட்டு படுகொலை செய்து கொலை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். இன்னும் பல தோழர்களை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். நேருக்குநேர் நின்று வார்த்தை வாதம் செய்ய வக்கில்லாத, துப்பில்லாத இந்த போலி கம்யூனிஸ்டுகள்(CPM) எதிர்பாராத சமயத்தில் ஒரு கூலிப்படையாகவே மாறி திட்டமிட்டு தோழர்களை தாக்கி கொலைவெறியாட்டம் போட்டு தங்களின் குணம், கொள்கை, எண்ணம் அனைத்தையும் மிகதெளிவாக காட்டியிருக்கிறார்கள். அடிமுட்டாளும் செய்யமறுக்கும் செயலை கூசாமல் செய்த இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழிக்க வேண்டும். மக்களும் தங்களை சூழ்ந்திருக்கும் சூது எது என்பதறிந்து தங்களவர்களிடம் அறிவுருத்துவது சமுதாய கடமையாகும், போலிகளை இனங்கண்டு வேரோடு அழிக்க விரைவாக வாருங்கள் தோழர்களே.


References....
http://newscap.wordpress.com/2008/05/12/cpm2/
http://poar-parai.blogspot.com/2007/11/cpm-cpi.html